bsnleu

bsnleu

welcome

welcome

Thursday 27 June 2019

இந்த மாதம் சம்பளம் வருமா?!' - பி.எஸ்.என்.எல் சரிவுக்கான 4 காரணங்கள்


BSNLEU அகில இந்திய உதவி பொது செயலரும், தமிழ் மாநில தலைவருமான தோழர் S . செல்லப்பா, ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த ப்ரதியேக பேட்டியின் முழு விவரம் 


கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்களுக்கு, ஜூன் மாத ஊதியத்தை வழங்க முடியாத நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

இதனால், 1.7 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ஜூன் மாத ஊதியத்துக்காக ரூ.850 கோடி செலவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியால் இயங்க முடியாத சூழலுக்குத் தள்ளப்படும் நிலையில் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 
தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொழில்நுட்ப சேவை வழங்க முடியாத சூழலில் பி.எஸ்.என்.எல் இருப்பதால், வாடிக்கையாளர்களிடம் போதிய வரவேற்பைப் பெற முடியவில்லை என்கிறார்கள், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள். மற்ற நிறுவனங்கள் 4ஜி சேவை வழங்கி, 5ஜியை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனமோ இதுவரை 4ஜி சேவையை வழங்கவே அனுமதிக்கவில்லை என்று வேதனையோடு குறிப்பிடுகிறார்கள் அவர்கள். 

இதுகுறித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் செல்லப்பாவிடம் பேசினோம். 

பி.எஸ்.என்.எல் நிறுவனம் நிதி நெருக்கடியில் தத்தளிப்பதற்கு 4 காரணங்களை அவர் நம்மிடம் பட்டியலிட்டார். 

1. 4 ஜி சேவைக்கான அனுமதி

``இன்றைய தேதிக்கு, தொழில்நுட்பச் சந்தையில் போட்டியில் இருப்பவை பி.எஸ்.என்.எல், ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா என்ற 4 நிறுவனங்கள். மற்ற 3 நிறுவனங்களுக்கும் 4ஜி சேவையை கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக வழங்கிவருகின்றன. ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு இதுவரை 4ஜி அலைக்கற்றை ஒதுக்கப்படவே இல்லை. அப்படி இருக்கும்போது, எப்படி போட்டி நிறுவனங்களை சமாளித்து, வருவாயைப் பெருக்க முடியும். பி.எஸ்.என்.எல் முன் நிற்கும் மிகப்பெரிய சவால் இது'' என விவரித்தவர்,

2. கடன் வாங்க அனுமதி கொடுக்காதது

``உதாரணமாக, ஜியோ நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு தொழில்நுட்பச் சந்தையில் களமிறங்கியது. ஜியோ, 1.5 லட்சம் கோடி முதலீட்டுடன் தொழிலில் கால்பதித்தது. அதில், 1.25 லட்சம் கோடி ரூபாய் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்பட்ட கடன். இன்றைய சூழலில், அந்த நிறுவனத்துக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் கடன் நிலுவையில் இருக்கிறது. 

வோடபோன் நிறுவனத்துக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும், ஏர்டெல் நிறுவனத்துக்கு 1.20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும் கடன் இருக்கிறது. அந்த 3 மூன்று நிறுவனங்களின் மொத்த கடன் மதிப்பு, ஏறக்குறைய 6 லட்சம் கோடி ரூபாய். ஆனால், பி.எஸ்.என்.எல்-லுக்கு 13,000 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே கடன் இருக்கிறது. நாங்கள் அரசிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக வங்கிகளிடம் கடன் வாங்க அனுமதி அளியுங்கள் என்பதுதான். இதற்காக, கடன் வாங்க அனுமதிக்கும் வகையில் Letter of Comfort கடிதம் கொடுங்கள் என்று கேட்கிறோம். நஷ்டத்திலிருந்து மீள கடன் வாங்கி தொழில் நடத்த அனுமதியுங்கள் என்கிறோம். ஆனால், அரசிடமிருந்து உரிய பதிலில்லை'' என்கிறார். 
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் செல்லப்பா

3.காலியாக உள்ள நிலங்களை வருமானத்துக்குப் பயன்படுத்த அனுமதிக்காதது

இதுகுறித்து அவர் கூறுகையில்,``பி.எஸ்.என்.எல்-லுக்கு சொந்தமாக 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. அதில், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் காலியாக இருக்கின்றன. இவற்றிலிருந்து வருவாய் பெறக்கூடிய வகையில், அந்த நிலங்களை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ விடுவது ஆகியவற்றுக்கும் அரசின் அனுமதிகோரி காத்திருக்கிறோம். இதன்மூலம், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிட்ட வாய்ப்புள்ளது. இதற்கு அனுமதி கோரி, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், அந்தக் கடிதத்துக்கு தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் சார்பில் வந்த பதிலில், `அந்த நிலங்களை பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குக் கடந்த 2000-ம் ஆண்டிலேயே மாற்றிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. அதனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குச் சொந்தமாக நிலமே இல்லை' என்று பதில் கிடைத்தது. தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஒத்துழைப்பு கொடுத்துவருகிறது. ஆனால், சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்-லுக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்கவில்லை என்பதே நிதர்சனம்'' என்றார்.  

   
4. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை

``2016-ம் ஆண்டு செப்டம்பரில், ஜியோ, 3 மாதங்களுக்கு சேவை அனைத்தும் இலவசம் என்ற அறிவிப்போடு சந்தையில் நுழைந்தது. அரசு விதிமுறைகளின்படி இலவச சேவைகளை 3 மாதங்களுக்கு மேல் வழங்கக் கூடாது. ஆனால் ஜியோ, தனது இலவச சேவையை 3 மாதங்களுக்குப் பின்னர், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்தது. இது அப்பட்டமான விதிமீறல் என தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் அன்றைய செயலாளர் தீபக் மிஸ்ரா, டிராய் அமைப்புக்குக் கடிதம் மூலம் எச்சரித்தார். இலவச சேவை வழங்குவதால் அரசுக்கும் இழப்பு ஏற்படும். ஏனென்றால், அவர்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு அளிக்க வேண்டும். இலவச சேவையை நீட்டித்தால், அரசுக்கும் இழப்புதான். இந்தத் தகவல்களை சுட்டிக்காட்டி, தீபக் மிஸ்ரா எழுதிய கடிதம் திரும்ப வந்தது. அவருக்குப் பணி மாறுதல் அளிக்கப்பட்டு, அந்தப் பதவியில் வேறு ஒருவர் அமர்த்தப்பட்டார். பின்னர், ஜியோவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. 

இந்த நஷ்டத்திலிருந்து மீள, பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடன் வாங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். 11,700 கோடி ரூபாய் அளவுக்கு  கடன் இருக்கிறது. நிதி நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் சூழலில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் அளிக்க முடியாமல் தவித்துவருகிறோம். குறைந்தபட்சம் 6,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரைதான் அவர்களின் மாத ஊதியம். மின்கட்டணம்கூட கட்டமுடியாத சூழ்நிலைதான் தற்போது இருக்கிறது. தமிழகத்தில் ரூ.30 கோடி அளவுக்கு மின்கட்டணம் பாக்கி இருக்கிறது. இதற்காக, 550 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் டவர் அல்லது அதனுடன் தொடர்புடைய மின் இணைப்புகள். இப்படி 550 டவர்கள் செயலிழந்துபோகும் பட்சத்தில், எப்படி மக்களுக்கு சேவை வழங்க இயலும்?. வாடிக்கையாளர்கள் எப்படி பி.எஸ்.என்.எல்-ஐ நம்புவார்கள். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் நடவடிக்கைதான் இது. அரசு அனுமதிக்கும்பட்சத்தில், இதிலிருந்து மீள இயலும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்'' என்றார் நம்பிக்கையுடன். 

பி.எஸ்.என்.எல்-லின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா?

CLICK HERE FOR LINK

Friday 21 June 2019

மத்திய சங்க செய்திகள்


Image result for bsnleu chq

BSNLன் புதிய மனிதவள இயக்குனராக திரு அர்விந்த் வட்னெர்கர் அவர்களை PSEB பரிந்துரை

பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வு ஆணையமான PSEB திரு அர்விந்த் வட்னெர்கர் அவர்களை BSNLன் DIRECTOR (HR)ஆக பரிந்துரைத்துள்ளது. இதற்கான தேர்வு 14.06.2019 அன்று நடைபெற்றது. தற்போது பூனே மாவட்டத்தின் முதன்மை பொது மேலாளராக அவர் பணியாற்றி வருகின்றார். 
======================================================================

19.06.2019 அன்று AUAB கூட்டம் நடைபெற உள்ளது.

19.06.2019 அன்று AUAB கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், 3வது ஊதிய மாற்றத்திற்காகவும், நமது BSNLன் புத்தாக்கம் தொடர்புடைய இதர கோரிக்கைகளுக்காகவும், நாம் கடைபிடிக்க வேண்டிய தந்திரோபயங்களை விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது. தற்போது நமது நிறுவனம் சந்தித்துக் கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பாக தனி கவனத்துடன் இந்தக் கூட்டம் விவாதித்து நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்கும். 

======================================================================

BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு ஜூலை 29 முதல் 31வரை பூனே நகரில் நடைபெறும்.

12.06.2019 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டத்தில் நமது விரிவடைந்த மத்திய செயற்குழுவை பூனே நகரில் ஜூலை 29 முதல் 31 வரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாநில செயலாளர்கள், மத்திய சங்க நிர்வாகிகளுடன் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கு பெற வேண்டும். 

======================================================================

ஒப்பந்த ஊழியர்களை குறைக்காதே!  ஊதியத்தை உடனே வழங்கு!! 
12.06.2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களும் துணை பொதுச்செயலாளர் தோழர் சுவபன் சக்கரவர்த்தி அவர்களும், DIRECTOR(FINANCE) திரு S.K.குப்தா அவர்களை சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தனர். 
1) ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க மாநிலங்களுக்கு கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவு
2) மாதக்கணக்கில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது.

ஒப்பந்த ஊழியர்களுக்கு தரவேண்டிய ஊதிய பாக்கிக்கான நிதியை விரைவில் ஒதுக்க வேண்டும் என நமது தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது பராமரிப்பு பணிகளை கடுமையாக பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டினர்.

அதற்கு பதிலளித்த DIRECTOR(FINANCE) BSNLன் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் நிதி இருப்பை பொறுத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ள காரணத்தினாலேயே ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் வேறு வழியின்றி ஏற்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இருந்த போதிலும் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நமது தலைவர்கள் DIRECTOR (FINANCE) அவர்களிடம் வற்புறுத்தி உள்ளனர்.

தோழமையுடன்,
c.செல்வின் சத்தியராஜ் 
மாவட்ட செயலர் 

Rumours regarding rolling back of the retirement age from 60 to 58.

CHQ is getting a lot of queries with regards to the rumours about reduction of the retirement age from 60 to 58. CHQ is aware that serious discussions are going on at the government level, on this matter. BSNLEU, in it’s letter, written to Shri Ravi Shankar Prasad, Hon’ble MoC & IT on 06.06.2019, has demanded that the assurance given by the government, at the time of formation of BSNL, should be honoured. The assurance given in the year 2000, about retirement age is that, only Government Rule would be made applicable to BSNL. As per the existing government rule, retirement age is 60. We hope that the government will honour it’s assurance given in the year 2000. Hence, we request the members not to get panicky.

[Date : 21 - Jun - 2019]

Thursday 6 December 2018

மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை விவரங்கள்

Related image


03.12.2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருடன், AUAB தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதன் பின்னணியில், காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது. பேச்சு வார்த்தையின் சாராம்சங்களை, MINUTES ஆக , "RECORD OF DISCUSSIONS" என DoT/BSNL வெளியிட்டுள்ளது. 

அதன்படி, BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதிய பங்களிப்பு ஆகிய விஷயங்களில், ஓய்வூதியர்களுக்கு, BSNL நிறுவனத்திற்கு சாதகமான முடிவுகளை அமுலாக்க வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக DoT செயலர் உறுதி அளித்துள்ளார். நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு அமைச்சர் கேட்டு கொண்டார். 

மூன்றாவது ஊதிய மாற்றம் சம்மந்தமாக மேலும் சில கூடுதல் விவரங்களை BSNL வழங்கவேண்டும். அனைவருக்கும் சாதகமாக தீர்வு ஏற்பட விரைந்து முடிவு எடுக்கும் படி, அமைச்சர் உத்தரவிட்டார். 

கூடுதலாக, தொழிற்சங்க தலைவர்களுக்கும், DoT க்கும் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றங்கள் செய்து கொள்ள ஆக்கபூர்வமான அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என அமைச்சர் கேட்டு கொண்டார். 

அதேபோல், தொலைத்தொடர்பு சந்தையில், BSNL நிறுவனம் ஒரு கேந்திரமான பாத்திரம் வகிக்க அனைவரும் பாடு பட வேண்டும் என்றும், அரசாங்கம் அதற்கு துணை நிற்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

மேற்கண்ட உறுதிமொழிகள்  அடிப்படையில், வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் கேட்டு கொண்டுள்ளார். 

BSNL ஊழியர்களும், அதிகாரிகளும், BSNL நிறுவனத்தை காக்க மேற்கொண்ட நல்ல நடவடிக்கைகளை முதலில் பாராட்டி விட்டு, அது தொடரவேண்டும், அது தான் பொது நலனுக்கு ஏற்புடையது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

தோழமையுடன்,
C.செல்வின் சத்தியராஜ் 
மாவட்ட செயலர்

Wednesday 29 August 2018

ஊதிய மாற்றக் குழுவின் மூன்றாவது கூட்டம்

ஊதிய மாற்றக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் தலைமையில் 27.08.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தின் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு பெற்றனர். கடந்த கூட்டத்தில் ஊழியர் தரப்பு தங்களின் முன்மொழிவை கொடுத்திருந்தது. இந்தக் கூட்டத்தில் நிர்வாக தரப்பு அவர்களின் முன் மொழிவை முன்வைத்தது. நிர்வாக தரப்பில் புதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவிற்கு பழையை ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச ஊதியத்தை 2.4ஆல் பெருக்கி NE1ன் குறைந்த பட்ச ஊதிய விகிதத்தை 18,600 ரூபாய் என முன்வைத்தது. ஊழியர் தரப்பு அதனை ஏற்றுக் கொள்ளாமல் பெருக்கல் காரணி என்பது 2.44ஆக இருக்க வேண்டும் என்றும் அதன் காரணமாக E1 ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவு ரூ.18,934/- என இருப்பதை முழுமையாக்கி ரூ.19,000/- என இருக்க வேண்டும் என்று வாதிட்டனர். அத்துடன் அனைத்து ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவை கணக்கிட பெருக்கல் காரணியாக 2.44 என்பதை அடிப்படையாக வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதனை பரிசீலிக்க நிர்வாக தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. 
ஊதிய விகிதத்தின் கால அளவு 43 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் முன்வைத்த ஆலோசனைக்கு பதிலளித்த நிர்வாக தரப்பு, இதன் காரணமாக ஓய்வூதிய பங்கீட்டில் செலவு கடுமையாக உயரும் என தெரிவித்தது. ஊதிய மாற்றத்திற்கு பின் எந்த ஒரு ஊழியரும் ஊதிய தேக்க நிலையை அடைந்துவிடாமல் இருப்பதற்கு தேவையான கால அளவு இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் மீதான விவாதத்தை 10.09.2018 அன்று நடைபெற உள்ள அடுத்த கூட்டத்தில் தொடரலாம் என முடிவு செய்யப்பட்டது. 
பேச்சு வார்த்தை மிக மெதுவாக செல்வது குறித்து ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர். இதே வேகத்தில் சென்றால் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க முடியாது என்று தெரிவித்த அவர்கள் இன்னமும் குறைந்த கால இடைவெளியில் இந்தக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். 

A brief note on the meeting of the Joint Committee on Wage Revision of the Non-Executives, held yesterday the 27-08-2018.

The 3rd meeting of the Joint Committee on Wage Revision of the Non-Executives took place yesterday the 27-08-2018. Shri H.C.Pant, Chairman of the Committee presided. All the Committee members, both from the Staff Side and the Management Side, were present. The Staff Side has already submitted it’s note on the structures of the new pay scales before the last meeting of the Committee. In yesterday’s meeting, the Management Side spelt out their proposals regarding the new pay scales.


Management Side proposed that, the minimum of the new pay scales should be arrived at, by multiplying the minimum of the existing pay scales by 2.4. Accordingly, they proposed the minimum of the new NE 1 pay scale as RS.18,600. However, the Staff Side did not accept this. They demanded that the multiplication factor should be 2.44. Accordingly, the minimum of the new NE1 pay scale comes to Rs.18,934 and that it should be rounded off to Rs.19,000. They also demanded that the 2.44 multiplication factor should be applied to arrive at the minimum of all the new pay scales. The Management Side agreed to examine these proposals of the Staff Side.

As regards the maximum of the new pay scales, the Staff Side has already proposed that they should be arrived at, by providing 43 years of span. But, the Management Side stated that this would result in heavy expenditure on account of payment of Pension Contribution. The Staff Side demanded that the spans of the pay scales should be provided in sufficient numbers, so that no Non-Executive would suffer from the problem of stagnation after the Wage Revision. It is decided to continue with the discussion in the next meeting, to be held on 10-09-2018.

The Staff Side members expressed their unhappiness that the talks are going on very slowly. They also stated that at this speed, the talks could not be completed expeditiously. They demanded that the meetings of the Committee should take place more frequently.

[Date : 28 - Aug - 2018]

Saturday 25 August 2018

Decisions taken in the meeting of the All Unions and Associations of BSNL, held on 23.08.2018.

A meeting of the All Unions and Associations of BSNL (AUAB) was held yesterday, the 23.08.2018, at BSNL MS office. The meeting was presided over by Com. Ravi Shil Verma, GS, AIGETOA. The meeting was attended by:-


BSNLEU    : Com.P.Abhimanyu,GS, and Com.Swapan Chakraborty,Dy.GS.
NFTE         : Com.Chandeswar Singh, GS, Com. K.S.Sheshadri, Dy.GS and Com.A.Rajamouli.
SNEA         : Com.K.Sebastin, GS.
AIGETOA   : Com.Ravi Shil Verma,GS.
BSNLMS    : Com.Suresh Kumar, GS, Com.Mallikarjuna, President.
ATM BSNL  : Com.Revti Prasad, AGS.
BSNL OA    : Com.H.P.Singh, Dy.GS.

The meeting observed one minute’s silence to condole the death of the people, who have lost their lives in the recent floods in Kerala.

The following decisions are taken in the meeting.

  1. The meeting decided to write to the CMD BSNL, suggesting to deduct one day’s basic pay from the salary of the willing employees, and to send the same to the Kerala Chief Minister’s Disaster Relief Fund.

  1. The meeting seriously discussed about the status of the issues of Wage Revision, Pension Revision, Pension Contribution on actual basic pay, Allotment of 4G spectrum and Superannuation benefits. The meeting decided to meet the CMD BSNL immediately, and to urge upon him to arrange a meeting with the Secretary, DoT, at the earliest, to discuss about these issues. The meeting also decided to meet the OSD of the Hon’ble MoS(C) at the earliest, and to discuss about the non-implementation of the assurances given by the Hon’ble MoS(C).

  1. As regards the issue of Pension Contribution on the basis of actual basic pay, the meeting resolved to seriously pursue the issue with the Ministry of Finance and the PMO, through the Hon’ble Minister of State for Finance and the Hon’ble Minister of State in the Prime Minister’s Office. The meeting also decided to write to the Cabinet Secretary, about the non-implementation of the order of the DOP&T,on the issue of calculating Pension Contribution.

  1. On the issue of Superannuation benefits, the AUAB has already written to the CMD BSNL. It was decided that the AUAB representatives should meet the CMD BSNL, and to demand expeditious action on it. Further, as regards the incorrect reply given by the Hon’ble MoS(C) on the floor of the Parliament, on the issue of implementation of the recommendations of the 2nd PRC, it is decided to write to the Hon’ble MoS(C).

*********